July 10, 2010

காற்று வெளியிடைக் கண்ணம்மா



காற்று வெளியிடைக் கண்ணம்மா 
கண்ணம்மா...

காற்று வெளியிடைக் கண்ணம்மா நின்றன்
காதலை எண்ணிக் களிக்கின்றேன்  (2)

அமுதூற்றினை ஒத்த இதழ்களும் 
இதழ்களும் ...
அமுதூற்றினை ஒத்த இதழ்களும்
நில ஊறித் ததும்பும் விழிகளும் (2) 


பத்து மாற்றுப் பொன்னொத்த நின் மேனியும் 
பத்து மாற்றுப் பொன்னொத்த நின் மேனியும் 
இந்த வையத்தில் யானுள்ள மட்டிலும்

எனை வேற்று நினைவின்றித் தேற்றியேஇங்கோர்
விண்ணவ னாகப் புரியுமே! (2 )

இந்தக் காற்று வெளியிடைக் கண்ணம்மா நின்றன்
காதலை எண்ணிக் களிக்கின்றேன் 

 நீயென தின்னுயிர் கண்ணம்மா ..
நீயென தின்னுயிர் கண்ணம்மா 
எந்த நேரமும் நின்றனைப் போற்றுவேன் (2)

துயர் போயின, போயின துன்பங்கள் நினைப்
பொன் எனக் கொண்ட பொழுதிலே  (2 )


 என்றன் வாயினிலே அமு தூறுதேகண்ணம்மா
என்ற பேர்சொல்லும் போழ்திலே
கண்ணம்மா ...
கண்ணம்மா...
 கண்ணம்மாவென்ற என்ற பேர்சொல்லும் போழ்திலே 
 என்றன் வாயினிலே அமு தூறுதே
 உயிர்த் தீயினிலே வளர் சோதியேஎன்றன்
சிந்தனையே, என்றன் சித்தமே
 இந்தக் காற்று வெளியிடைக் கண்ணம்மா நின்றன்
காதலை எண்ணிக் களிக்கின்றேன்