December 26, 2012

தீதும், நன்றும், பிறர் தர வாரா

யாதும் ஊரே; யாவரும் கேளிர்;
தீதும், நன்றும், பிறர் தர வாரா;
நோதலும், தணிதலும், அவற்றோ ரன்ன;
சாதலும் புதுவது அன்றே! வாழ்தல்
இனிது என மகிழ்ந்தன்றும் இலமே! முனிவின்
இன்னாது என்றலும் இலமே! மின்னொடு
வானம் தண் துளி தலைஇ ஆனாது,
கல்பொருது இரங்கும், மல்லல் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புனை போல், ஆருயிர்
முறைவழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் ஆதலின், மாட்சியில்
பெரியோரை வியத்தலும் இலமே!
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே!
யாதும் ஊரே, யாவரும் கேளிர்;
அனைத்து இடங்களும் நமது ஊரே ,
அனைவரும் நம் உறவினர்களே ;

 தீதும், நன்றும், பிறர் தர வாரா;
தீயவை , நல்லவை. பிறர் தந்து வருபவை அல்ல 

நோதலும், தணிதலும், அவற்றோர் அன்ன;
கஷ்டங்களும், அந்த கஷ்டங்களுக்கான  
தீர்வும் கூட அதே  போல தான். பிறர் தந்து வருபவை அல்ல.

சாதலும் புதுவது அன்றே! 
மரணம் புதுமையான ஒரு விஷயம் இல்லை.
வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே!
வாழ்க்கை இனிமையானது என்று மகிழவும் மாட்டோம்.
முனிவின் இன்னாது என்றலும் இலமே!
வாழ்வு துன்பமென்று கூறி ஒதுங்கவும் மாட்டோம் 
மின்னொடு வானம் தண் துளி தலைஇ ஆனாது, 
கல்பொருது இரங்கும், மல்லல் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புனை போல், ஆருயிர்
முறைவழிப் படூஉம் என்பது திறவோர் 
காட்சியில் தெளிந்தனம் ஆதலின்,   

ஆற்று நீர்  செல்லும் வழியில் ஓடும் படகு போல,
நமது வாழ்க்கை முன்னரே  தீர்மானிக்கப்பட்ட  
வழியே தான்  நடக்கும் என்று,
வாழ்வின்  திறம் அறிந்த சான்றோர் 
கூறியதைக் கேட்டு தெளிவு பெற்றோம் ஆகையால்

மாட்சியில் பெரியோரை வியத்தலும் இலமே!
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே!

மாண்புள்ள பெரியோரைக் கண்டு 
நாம் வியப்படையவும்  மாட்டோம்.
நம்மினும் தாழ்ந்த நிலையிலுள்ளவர்களை
இகழ்ந்து தூற்றவும் மாட்டோம்.


December 21, 2012

நடிப்பு சுதேசிகள்

நடிப்பு சுதேசிகள்  என்ற  தலைப்பில் பாரதி எழுதிய  பாடல்  இது. 

பிரிட்டிஷ்  ஆட்சி காலத்தில் சுதந்திரம் வேண்டிப்  போராடியவர்களுக்கு சுதேசிகள் என்று பெயர். சுதந்திரம் வேண்டிப்  போராடுபவர்களை தேசதுரோகம் செய்தவர்களைப்  போல் பிரிட்டிஷ் அரசு நடத்தியதால் சுதந்திரம் வேண்டி போராடுபவர்களுடன் பேசவோ அவர்களுடன் கொடுக்கல் வாங்கல் வைத்துக்கொள்ளவோ கூட சக மனிதர்கள் பயந்திருந்த காலம் அது. 
இது ஒரு புறம் இருக்க, ஒரு சிலரோ சுதேசிகள் போல் வாய்    கிழிய  பேசுவார்களே ஒழிய, உண்மையான சுதந்திர   உணர்வு  இல்லாதவர்களாகவே இருப்பார்கள்.
அவர்களை சாடி பாரதி எழுதிய கவிதை தான்  இது.
இன்று நடிப்பு சுதேசிகளை காணும் பாக்கியம் நமக்கு கிடைக்காதெனினும், வாய்சொல்லில் வீரர்கள் நம்மை சுற்றி பலர்   எல்லா கால கட்டத்திலும் இருக்கத்  தான்  செய்கிறார்கள். 

பாரதியின் பாடல் இங்கே  

நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமு மின்றி,
வஞ்சனை சொல்வா ரடீ! - கிளியே!
வாய்ச் சொல்லில் வீரரடீ !

கூட்டத்திற்  கூடிநின்று கூவிப் பிதற்ற லன்றி

 நாட்டத்திற்  கொள்ளா ரடீ! - கிளியே!
நாளில் மறப்பா ரடீ !

சொந்த அரசும்புவிச் சுகங்களும் மாண்பு களும்

அந்தகர்க் குண்டாகு மோ? - கிளியே!
அலிகளுக் கின்ப முண்டோ?

கண்கள் இரண்டிருந்தும் காணுந் திறமை யற்ற

பெண்களின் கூட்டமடீ! - கிளியே!
பேசிப் பயனென் னடீ

யந்திர சாலை யென்பர் எங்கள் துணிகளென்பர்,

மந்திரத் தாலே யெங்கும் - கிளியே!
மாங்கனி வீழ்வ துண்டோ!

உப்பென்றும் சீனி என்றும் உள்நாட்டுச் சேலை என்றும்

செப்பித் திரிவா ரடீ! - கிளியே!
செய்வ தறியா ரடீ!

தேவியர் மானம் என்றும் தெய்வத்தின் பக்தி என்றும்

நாவினாற் சொல்வ தல்லால் - கிளியே!
நம்புத லற்றா ரடீ!

மாதரைக் கற்பழித்து வன்கண்மை பிறர் செய்யப்

பேதைகள் போலு யிரைக் - கிளியே
பேணி யிருந்தா ரடீ!

தேவி கோயிலிற் சென்று தீமை பிறர்கள் செய்ய

ஆவி பெரிதென் றெண்ணிக் - கிளியே
அஞ்சிக் கிடந்தா ரடீ!

அச்சமும் பேடி மையும் அடிமைச் சிறு மதியும்

உச்சத்திற் கொண்டா ரடீ - கிளியே
ஊமைச் சனங்க ளடீ!

ஊக்கமும் உள்வலியும் உண்மையிற் பற்று மில்லா

மாக்களுக் கோர் கணமும் - கிளியே
வாழத் தகுதி யுண்டோ?

மானம் சிறிதென் றெண்ணி வாழ்வு பெரிதென் றெண்ணும்

ஈனர்க் குலகந் தனில் - கிளியே!
இருக்க நிலைமை யுண்டோ?

சிந்தையிற் கள்விரும்பிச் சிவசிவ வென்பது போல்

வந்தே மாதர மென்பார்! - கிளியே!
மனதி லதனைக் கொள்ளார்

பழமை பழமை யென்று பாவனை பேச லன்றிப்

பழமை இருந்த நிலை! - கிளியே!
பாமர ரேதறி வார்!

நாட்டில் அவமதிப்பும் நாணின்றி இழி செல்வத்

தேட்டில் விருப்புங் கொண்டே! - கிளியே!
சிறுமை யடைவா ரடீ!

சொந்த சகோ தரர்கள் துன்பத்திற் சாதல் கண்டும்

சிந்தை இரங்கா ரடீ! - கிளியே!
செம்மை மறந்தா ரடீ!

பஞ்சத்தும் நோய்க ளிலும் பாரதர் புழுக்கள் போல்

துஞ்சத்தும் கண்ணாற் கண்டும் - கிளியே!
சோம்பிக் கிடப்பா ரடீ!

தாயைக் கொல்லும் பஞ்சத்தைத் தடுக்க முயற்சி யுறார்

வாயைத் திறந்து சும்மா - கிளியே!
வந்தே மாதர மென்பார்!

December 13, 2012

கண்ணம்மா என் குலதெய்வம் - நின்னைச் சரணடைந்தேன்

 
கண்ணம்மாவை தனது குலதெய்வமாக பாவித்து 
அவளிடம் சரண் புகும் பாரதியார், 
 
பொன்னை உயர்வை புகழை விரும்பும் 
என்னை கவலைகள் அணுகா வண்ணம் 
காப்பாய் தாயே...
 
வறுமையும் அச்சமும் என் நெஞ்சில் வந்து 
குடி புகுந்துள்ளன அவற்றை கொன்று 
அழிப்பாய் தாயே ..
 
நான் என்ன செய்வது என்று குழம்பி தவிக்காமல், 
நீ சொல்லும் வண்ணம் செய்து 
மன நிம்மதி பெற அருள்வாய் தாயே.. 
 
என்று மனமுருக வேண்டி பின் 
 
அவளை சரண் புகுந்து விட்டதால் இனி 
துன்பமோ சோர்வோ தோல்வியோ எனக்கு 
இல்லை..
நல்லது எது  தீயது எது என்று எனக்கு தெரியாது,
அந்த  தாயே நல்லதை நிலை நிறுத்தி
தீமையை என்னை விட்டு ஓட்ட வேண்டும் 
என உருகும் பாடல் இது 
 
அச்சமில்லை அச்சமில்லை என்று பாடியவன் 
மனதிலே அச்சம் புகுந்ததேன்? 
என்ற கேள்வியுடன் இதோ அந்த பாடல்  
 
 
  
 
 
 நின்னைச் சரணடைந்தேன் - கண்ணம்மா!
  நின்னைச் சரணடைந்தேன்!

                  சரணங்கள் 
 
 பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும்
  என்னைக் கவலைகள் தின்னத்  தகாதென்று

 மிடிமையும் அச்சமும் மேவியென் நெஞ்சில்
 குடிமைபுகுந்தன, கொன்றவைபோக் கென்று

 தன்செய லெண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு
 நின்செயல் செய்து நிறைவு பெறும்வணம்

 துன்ப மினியில்லை, சோர்வில்லை, தோற்பில்லை,
 அன்பு நெறியில் அறங்கள் வளர்த்திட

 நல்லது தீயது நாமறியோம்! அன்னை
 நல்லது நாட்டுக! தீமையை ஓட்டுக!

December 12, 2012

நிற்பதுவே,நடப்பதுவே, பறப்பதுவே



நிற்பதுவே,நடப்பதுவே, பறப்பதுவே, நீங்க ளெல்லாம்
சொற்பனந் தானோ? பல தோற்ற மயக்கங்களோ?
கற்பதுவே! கேட்பதுவே, கருதுவதே நீங்க ளெல்லாம்
அற்ப மாயைகளோ? உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?


வானகமே,  இளவெயிலே,  மரச்செறிவே நீங்க ளெல்லாம்
கானலின் நீரோ? வெறுங்  காட்சிப் பிழைதானோ?
போனதெல்லாம் கனவினைப்போல் புதைந்தழிந்தே போனதனால்
நானுமோர்  கனவோ? இந்த ஞாலமும் பொய்தானோ?


கால மென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பலநினைவும்
கோலமும் பொய்களோ? அங்குக் குணங்களும் பொய்களோ?

 சோலையிலே மரங்க ளெல்லாம்  தோன்றுவதோர் விதையிலென்றால் ,
சோலை பொய்யாமோ? - இதை சொல்லோடு  சேர்ப்பாரோ ?

காண்பவெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்பமன்றோ?
வீண்படு பொய்யிலே-நித்தம் விதிதொடர்ந் திடுமோ?

காண்பதுவே உறுதிகண்டோ ம் காண்பதல்லால் உறுதியில்லை
காண்பது சக்தியாம்-இந்தக் காட்சி நித்தியமாம்.

December 11, 2012

இன்று மகாகவி பாரதியின் பிறந்த நாள்


பாரதி..
இன்று உன்  பிறந்த நாள்..
நீ பிறந்த அந்நாளில் நான் இந்த புவியில் இல்லை..
உன் பிறந்த நாளை நான்
கொண்டாடும் இந்நாளில் நீ இந்த புவியில் இல்லை..
இன்று நீ இங்கு இல்லாதிருக்கலாம்..
எனினும் நீ  எழுதிச்சென்ற கவிதைகள்
என் வாழ்வின் ஒரு அங்கம் என்பதை நீ  அறிவாயோ

December 3, 2012

தேடிச் சோறுநிதந் தின்று

தேடிச் சோறுநிதந் தின்று - பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ?

November 30, 2012

நெஞ்சு பொறுக்குதில்லையே

நெஞ்சு பொறுக்குதில்லையே -இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்,

அஞ்சி யஞ்சிச்  சாவார்-இவர் 

அஞ்சாத பொருளில்லை அவனியிலே 

வஞ்சனை ப் பேய்கள் என்பார்-இந்த 

மரத்தில் என்பார்; அந்த குளத்தில் என்பார்

துஞ்சுது முகட்டில்  என்பார்-மிக 

துயர்ப் படுவார் எண்ணிப்  பயப்படுவார் 
(நெஞ்சு)


மந்திர வாதி யென்பார்-சொன்ன  

மாத்திரத்தி லேமனக் கிலிபிடிப்பார் 

யந்திர சூனியங்கள் -இன்னும் 

எத்தனை ஆயிரம் இவர் துயர்கள்!

தந்த பொருளைக் கொண்டே - ஜனம் 

தாங்குவர்  உலகத்தில் அரசரெல்லாம் 
அந்த அரசியலை -இவர் 

அஞ்சுதரு பேயென்றெண்ணி  நெஞ்சம் அயர்வார்
(நெஞ்சு)
  
சிப்பாயைக் கண்டு  அ ஞ்சுவார்-ஊர்ச்

சேவகன் வருதல்கண்டு மனம்பதைப்பார் 

துப்பாக்கி கொண்டு  ஒ ருவன்  வெகு 

தூரத்தில் வரக்கண்டு வீட்டிலொளிப்பார் 

அப்பால்  எவனோ செல்வான்-அவன் 

ஆடையைக் கண்டு பயந் தெழுந்துநிற்பார் 

எப்போதும் கைகட்டுவார்-இவர் 

யாறிடத்தும் பூனைகள்போல் ஏங்கிநடப்பார் 
(நெஞ்சு)
  
நெஞ்சு பொறுக்குதில்லையே -இந்த

நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால் 

கொஞ்சமோ பிரிவினைகள் -ஒரு 

கோடிஎன்  றால் அது பெரிதாமோ?

ஐந்துதலைப் பாம்பென் பான்-அப்பன் 

ஆறுதலை யென்றுமகன் சொல்லிவிட்டால், 

நெஞ்சு பிரிந்திடு வார்-பின்பு 

நெடுநாளிருவரும் பகைத்திருப்பார் (
நெஞ்சு)


சாத்திரங்கள்   ஒன்றும்  காணார் -பொய்ச் 

சாத்திரப் பேய்கள் சொல்லும் வார்த்தை நம்பியே 

கோத்திரம் ஒன் றா யிருந்தாலும் -ஒரு 

கொள்கையிற் பிரிந்தவனைக் குலைத்திகழ் வார் 

தோத்திரங்கள் சொல்லி அவர்தாம் -தமைச் 

சூதுசெய்யும் நீசர்களைப் பணிந்திடுவார் 

ஆத்திரங்  கொண்டே இவன் சைவன் -இவன் 

அரிபக்த னென்றுபெருஞ் சண்டையிடுவார்.
 (நெஞ்சு)

நெஞ்சு பொறுக்குதில்லையே -இதை 
நினைந்து நினைந்திடினும் வெறுக்கு  திலையே  
கஞ்சி குடிப்பதற் கிலார் -அதன் 
காரணங்கள் இவையென்னும் அறிவுமிலார்   
பஞ்சமோ பஞ்சம் என்றே -நிதம் 
பரிதவித்தே உயிர் துடிதுடித்துத் 
துஞ்சி மடிகின்றாரே -இவர் 
துயர்களைத் தீர்க்கவோர் வழியிலையே (நெஞ்சு)


எண்ணிலா நோயுடையார்-இவர் 
எழுந்து நடப்பதற்கும் வலிமையிலார் 
கண்ணிலாக் குழந்தை கள்போல்-பிறர் 
காட்டிய வழியிற்சென்று மாட்டிக்கொள்வார்
நண்ணிய பெருங்கலைகள் - பத்து 
நாலாயிரங் கோடி நயந்து நின்ற 
புண்ணிய நாட்டினிலே -இவர் 
பொறியற்ற விலங்குகள் போல வாழ்வார் (நெஞ்சு)

November 25, 2012

மெல்லத் தமிழினிச் சாகும்?

தமிழ் இனி மெல்ல சாகும் என்று மகாகவி பாடியதாக ஒரு தவறான கருத்து நிலவி வருகிறது . உண்மையில் "தமிழ் இனி மெல்ல சாகும் என்று  ஒன்றும் தெரியாத பேதை  ஒருவன் கூறுகின்றான். இந்த மாதிரி வார்த்தைகளை நான் கேட்க விரும்பவில்லை. எனவே தமிழை காப்போமாக"  என்றே அவர் கூறுகிறார்.    



ஆதிசிவன் பெற்று விட்டான்-என்னை
      ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்
வேதியன் கண்டு மகிழ்ந்தே-நிறை
      மேவும் இலக்கணஞ் செய்து கொடுத்தான்.


மூன்று குலத்தமிழ் மன்னர்-என்னை
      மூண்டநல் லன்பொடு நித்தம் வளர்த்தார்;
ஆன்ற மொழிகளி னுள்ளே-உயர்
      ஆரியத் திற்கு நிகரென வாழ்ந்தேன்.


கள்ளையும் தீயையும் சேர்த்து-நல்ல
      காற்றையும் வான வெளியையும்  சேர்த்துத்
தெள்ளு தமிழ்ப்புல வோர்கள்-பல
      தீஞ்சுவைக் காவியம் செய்து கொடுத்தார்.


சாத்திரங் கள்பல தந்தார்-இந்தத்
      தாரணி யெங்கும் புகழ்ந்திட வாழ்ந்தேன்
நேத்திரங் கெட்டவன் காலன்-தன்முன்
      நேர்ந்த தனைத்தும் துடைத்து முடிப்பான்.


நன்றென்றுந் தீதென்றும் பாரான்-முன்பு
      நாடும் பொருள்கள் அனைத்தையும் வாரிச்
சென்றிடுங் காட்டுவெள் ளம்போல்-வையச்
      சேர்க்கை யனைத்தையும் கொன்று நடப்பான்.


கன்னிப் பருவத்தில் அந்நாள்-என்றன்
      காதில் விழுந்த திசைமொழி யெல்லாம்
என்னென்ன வோபெய ருண்டு-பின்னர்
      யாவும் அழிவுற் றிறந்தன கண்டீர்!


தந்தை அருள்வலி யாலும்-முன்பு
      சான்ற புலவர் தவவலி யாலும்
இந்தக் கணமட்டும் காலன்-என்னை
      ஏறிட்டுப் பார்க்கவும் அஞ்சி யிருந்தான்.


இன்றொரு சொல்லினைக் கேட்டேன்-இனி
      ஏதுசெய் வேன்?என தாருயிர் மக்காள்!
கொன்றிடல் போலொரு வார்த்தை-இங்கு
      கூறத் தகாதவன் கூறினன் கண்டீர்!


"புத்தம் புதிய கலைகள்-பஞ்ச
      பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்;
மெத்த வளருது மேற்கே-அந்த
      மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை.

சொல்லவும் கூடுவ தில்லை-அவை
      சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை;

மெல்லத் தமிழினிச் சாகும்-அந்த
      மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்"

என்றந்தப் பேதை உரைத்தான்-ஆ!
      இந்த வசையெனக் கெய்திட லாமோ?

சென்றிடு வீர் எட்டுத் திக்கும்-கலைச்
      செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!


தந்தை அருள்வலி யாலும்-இன்று
      சார்ந்த புலவர் தவவலி யாலும்
இந்தப் பெரும்பழி தீரும்-புகழ்
      ஏறிப் புவிமிசை என்றும் இருப்பேன்.

November 9, 2012

பெண்கள் விடுதலைக் கும்மி

 
காப்பு  
பெண்கள் விடுதலை பெற்ற மகிழ்ச்சிகள்
பேசிக் களிப்பொடு நாம்பாடக்
கண்களி லேயொளி போல வுயிரில்
கலந்தொளிர் தெய்வம் நற் காப்பாமே. 

 

கும்மி யடி!தமிழ் நாடு முழுதும்
குலுங்கிடக் கைகொட்டிக் கும்மியடி!
நம்மைப் பிடித்த பிசாசுகள் போயின
நன்மை கண்டோ மென்று கும்மியடி!                                                  (கும்மி)

ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்
றெண்ணி யிருந்தவர் மாய்ந்து விட்டார்;
வீட்டுக் குள்ளேபெண்ணைப் பூட்டிவைப் போமென்ற
விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார்.                                                         (கும்மி)

மாட்டையடித்து வசக்கித் தொழுவினில்
மாட்டும் வழக்கத்தைக் கொண்டு வந்தே,
வீட்டினில் எம்மிடங் காட்ட வந்தார்,அதை
வெட்டிவிட் டோமென்று கும்மியடி!                                                      (கும்மி)

நல்ல விலைகொண்டு நாயை விற்பார்,அந்த
நாயிடம் யோசனை கேட்பதுண்டோ?
கொல்லத் துணிவின்றி நம்மையும் அந்நிலை
கூட்டிவைத் தார்பழி கூட்டி விட்டார்.                                                   (கும்மி)

கற்பு நிலையென்று சொல்ல வந்தார்,இரு
கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்;
வ்ற்புறுத்திப் பெண்ணைக் கட்டிக் கொடுக்கும்
வழக்கத்தைத் தள்ளி மிதித்திடுவோம்.                                                 (கும்மி)

பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினிற்  பெண்கள் நடத்தவந்தோம்;
எட்டு மறிவினில் ஆணுக் கிங்கேபெண்
இளைப்பில்லை காணென்று கும்மியடி!                                              (கும்மி)

வேதம் படைக்கவும் நீதிகள் செய்யவும்
வேண்டி வந்தோ மென்று கும்மியடி!
சாதம் படைக்கவும் செய்திடுவோம்;தெய்வச்
சாதி படைக்கவும் செய்திடுவோம்.                                                         (கும்மி)

காத லொருவனைக் கைப்பிடித்தே,அவன்
காரியம் யாவினும் கைகொடுத்து,
மாத ரறங்கள் பழமையைக் காட்டிலும்
மாட்சி பெறச்செய்து வாழ்வமடி!                                                             (கும்மி)





November 8, 2012

புதுமைப் பெண்

தீர்க்கதரிசி பாரதியின்  இக்கவிதை வரிகள் படிக்க படிக்க உள்ளம்சிலிர்க்கிறது.  யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்.
 
 போற்றி போற்றி!ஓர் ஆயிரம் போற்றி!நின்
பொன்ன டிக்குப்பல் லாயிரம் போற்றி காண்!
சேற்றி லேபுதி தாக முளைத்த தோர்
செய்ய தாமரைத் தேமலர் போலொளி
தோற்றி நின்றனை பாரத நாட்டிலே;
துன்பம் நீக்கும் சுதந்திர பேரிகை
சாற்றி வந்தனை,மாதரசே!எங்கள்
சாதி செய்த தவப்பயன், வாழி நீ!

மாதர்க் குண்டு சுதந்திரம் என்றுநின்
வண்ம லர்த்திரு வாயின் மொழிந்தசொல்
நாதந் தானது நாரதர் வீணையோ?
நம்பிரான் கண்ணன் வேய்ங்குழ லின்பமோ?
வேதம் பொன்னுருக் கன்னிகை யாகியே
மேன்மை செய்தெமைக் காத்திடச் சொல்வதோ ?
சாதல் மூத்தல் கெடுக்கும் அமிழ்தமோ?
தையல் வாழ்கபல் லாண்டுபல்  லாண்டிங்கே!

அறிவு கொண்ட மனித வுயிர்களை
அடிமை யாக்க முயல்பவர் பித்தராம்;
நெறிகள் யாவினும் மேம்பட்டு மானிடர்
நேர்மை கொண்டுயர் தேவர்க ளாதற்கே,
சிறிய தொண்டுகள் தீர்த்தடி மைச்சுருள்
தீயி லிட்டுப் பொசுக்கிட வேண்டுமாம்;
நறிய பொன்மலர் மென்சிறு வாயினால்
நங்கை கூறும் நவீனங்கள் கேட்டிரோ!

ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
அறிவி லோங்கி,இவ் வையம் தழைக்குமாம்;
பூணு நல்லறத் தோடிங்குப் பெண்ணுருப்
போந்து நிற்பது தாய்சிவ சக்தியாம்;
நாணும் அச்சமும் நாய் கட்கு வேண்டுமாம்;
ஞான நல்லறம் வீர சுதந்திரம்
பேணு நற்குடிப் பெண்ணின் குணங்களாம்;
பெண்மைத் தெய்வத்தின் பேச்சுக்கள் கேட்டிரோ!

நிலத்தின் தன்மை பயிர்க்குள தாகுமாம்;
நீசத் தொண்டு மடமையும் கொண்டதாய்
தலத்தில் மாண்புயர் மக்களைப் பெற்றிடல்
சால வேயரி தாவதொர் செய்தியாம்;
குலத்து மாதர்க்குக் கற்பியல் பாகுமாம்;
கொடுமை செய்தும் அறிவை யழித்துமந்
நலத்தைக் காக்க விரும்புதல் தீமையாம்;
நங்கை கூறும் வியப்புக்கள் கேட்டிரோ!

புதுமைப் பெண்ணிவள் சொற்களும் செய்கையும்
பொய்மை கொண்ட கலிக்குப் புதிதன்றிச்
சதும றைப்படி மாந்தர் இருந்தநாள்
தன்னி லேபொது வான வழக்கமாம்;
மதுரத் தேமொழி மங்கையர்  உண்மைதேர்
மாத வப்பெரி யோருட னொப்புற்றே
முதுமைக் காலத்தில் வேதங்கள் பேசிய
முறைமை மாறிடக் கேடு விளைந்ததாம்

நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்;
அமிழ்ந்து பேரிரு ளாமறி யாமையில்
அவல மெய்திக் கலையின் றி வாழ்வதை
உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம்
உதய கன்னி  உரைப்பது கேட்டிரோ!

உலக வாழ்க்கையின் நுட்பங்கள் தேரவும்,
ஓது பற்பல நூல்வகை கற்கவும்,
இலகு சீருடை நாற்றிசை நாடுகள்
யாவுஞ் சென்று புதுமை கொணர்ந்திங்கே
திலக வாணுத லார்நங்கள் பாரத
தேச மோங்க உழைத்திடல் வேண்டுமாம்;
விலகி வீட்டிலோர் பொந்தில் வளர்வதை
வீரப் பெண்கள் விரைவில் ஒழிப்பராம்.

சாத்தி ரங்கள் பலபல கற்பராம்;
சவுரி யங்கள் பலபல செய்வராம்;
மூத்த பொய்மைகள் யாவும் அழிப்பராம்;
மூடக் கட்டுக்கள் யாவுந் தகர்ப்பராம்;
காத்து மானிடர் செய்கை யனைத்தையும்
கடவு ளர்க்கினி தாகச் சமைப்பராம்;
ஏத்தி ஆண்மக்கள் போற்றிட வாழ்வராம்;
இளைய நங்கையின் எண்ணங்கள் கேட்டிரோ;

போற்றி,போற்றி!ஜயஜய போற்றி!இப்
புதுமைப் பெண்ணொளி வாழிபல் லாண்டிங்கே!
மாற்றி வையம் புதுமை யுறச்செய்து
மனிதர் தம்மை அமரர்க ளாக்கவே
ஆற்றல் கொண்ட பராசக்தி யன்னை,நல்
அருளி னாலொரு கன்னிகை யாகியே
தேற்றி உண்மைகள் கூறிட வந்திட்டாள்
செல்வம் யாவினும் மேற்செல்வம் எய்தினோம்.!

அச்சமில்லை அச்சமில்லை

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
துச்சமாக எண்ணி நம்மைத் தூறு செய்த போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்று விட்ட போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சை கொண்ட பொருளெலாம் இழந்த விட்ட போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.


கச்சணிந்த கொங்கை மாதர் கண்கள் வீசு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.
நச்சை வாயி லேகொணர்ந்து நண்ப ரூட்டு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.
பச்சையூ னியைந்த வேற் படைகள் வந்த போதினும் ,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.
உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.

November 2, 2012

சின்னஞ் சிறு கிளியே


பெண் குழந்தைகளை பெற்றெடுத்ததில்  பெருமிதம் கொண்டு, அவர்களை அன்புடன் அரவணைக்கும் அனைத்து பெற்றோர்களுக்கும் மஹா கவியின் இப்பாடல்  வரிகள் சமர்ப்பணம்


சின்னஞ் சிறு கிளியே - கண்ணம்மா!
செல்வக் களஞ்சியமே!
என்னைக் கலி தீர்த்தே - உலகில்
ஏற்றம் புரிய வந்தாய்!

பிள்ளைக் கனியமுதே - கண்ணம்மா
பேசும்பொற் சித்திரமே!
அள்ளி யணைத்திடவே - என் முன்னே
ஆடி வருந்தேனே!

ஓடி வருகையிலே  - கண்ணம்மா
உள்ளங் குளிரு தடீ!
ஆடித்திரிதல் கண்டால் - உன்னைப்போய்
ஆவி தழுவு தடீ!

உச்சி தனை முகந்தால் - கருவம்
ஓங்கி வளரு தடீ!
மெச்சி யுனை யூரார் - புகழ்ந்தால்
மேனி சிலிர்க்கு தடீ!

கன்னத்தில் முத்தமிட்டால் - உள்ளந்தான்
கள்வெறி கொள்ளு தடீ!
உன்னைத் தழுவிடிலோ - கண்ணம்மா
உன்மத்த மாகு தடீ!

சற்றுன் முகஞ் சிவந்தால் - மனது
சஞ்சல மாகு தடீ!
நெற்றி சுருங்கக் கண்டால் - எனக்கு
நெஞ்சம் பதைக்கு தடீ!

உன்கண்ணில் நீர்வழிந்தால் - என்நெஞ்சில்
உதிரங் கொட்டு தடீ!
என் கண்ணிற் பாவையன்றோ? - கண்ணம்மா!
என்னுயிர் நின்ன தன்றோ?

October 26, 2012

நல்லதோர் வீணை செய்தே...

பாடலை கேட்க இங்கே கிளிக் செய்யவும் 


நல்லதோர் வீணை செய்தே - அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ (2)

சொல்லடி சிவசக்தி - எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்  (2)  (நல்லதோர்)

வல்லமை தாராயோ - இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே (2)


சொல்லடி சிவசக்தி - நிலச்
சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ  (2)   (நல்லதோர்)


விசையுருப் பந்தினைப் போல் - உள்ளம்
வேண்டியபடிசெல்லும்  உடல் கேட்டேன் (2)

நசையறு மனம் கேட்டேன் - நித்தம்
நவமெனச் சுடர் தரும் உயிர் கேட்டேன்  (2)  (நல்லதோர்)

தசையினைத் தீச்சுடினும் - சிவ
சக்தியைப் பாடும் நல்லகம் கேட்டேன் (2)

அசைவறு மதி கேட்டேன் - இவை
அருள்வதில் உனக்கெதும்  தடையுளதோ (2) (நல்லதோர்)
 

October 16, 2012

கனகதாரா ஸ்தோத்ரம்


அங்கம்ஹரே: புலகபூஷணமாஸ்ரயந்தீ
ப்ருங்காங்கநேவ முகுலாபரணம் தமாலம்
அங்கீக்ராதாகில விபூதிரபாங்கலீலா
மாங்கல்யதாஸ்து மம மங்களதேவதாய:


முக்தாமுஹுர்விதததி வதநே முராரே:
பிரேமத்ரபாப்ரணிஹிதாநி கதாகதாநி
மாலா த்ருஸோர் மதுகரீவ மஹோத்பலே யா
ஸா மே ஸ்ரியம் திஸது ஸாகரஸம்பவாயா:


ஆமீலிதாக்ஷமதிகம்ய முதா முகுந்தம்
ஆநந்தகந்தமநிமேஷமநங்க தந்த்ரம்
ஆகேகரச்திதகநீநிகபக்ஷ்மநேத்ரம்
பூத்யை பவேந் மம புஜங்க ஸயாங்கநாயா:


பாஹ்வந்தரே மதுஜித: ஸ்ரிதகௌஸ்துபே யா
ஹாராவலீவ ஹரிநீலமயீ விபாதி
காமப்ரதா பகவதோ(அ)பி கடாக்ஷமாலா
கல்யாணமாவஹது மே கமலாலயாயா:


காலாம்புதாலி லலிதொரஸி கைடபாரே:
தாராதரே ஸ்புரதி யா தடிதங்கநேவ
மாது ஸமஸ்தஜகதாம் மஹநீயமூர்த்தி:
பத்ராணி மே திஸது பார்க்கவ நந்தநாயா:


ப்ராப்தம் பதம் ப்ரதமத: கலு யத்ப்ரபாவாத்
மாங்கல்யபாஜி மதுமாதிநி மந்மதேந
மய்யாபதேத் ததிஹ மந்த்ரமீக்ஷணார்த்தம்
மந்தாலஸம் ஸ மகராலய கந்யகாயா:


விஷ்வாமரேந்த்ரபத விப்ரமதாநதக்ஷம்
ஆநந்தஹேதுரதிகம் முரவித்விஷோ(அ)பி
ஈஷந்நிஷீதது மயி க்ஷணமீக்ஷணார்த்த
மிந்தீவரோதர ஸஹோதர மிந்திராயா:


இஷ்டாவிஷிஷ்டமதயோபி யாயா தயார்த்த
ஸ்ருஷ்ட்யா த்ரிவிஷ்டபபதம் சுலபம் லபந்தே
திருஷ்டி: ப்ரஹ்ருஷ்ட கமலோதர தீப்திரிஷ்டாம்
புஷ்டிம் க்ருஷீஷ்ட மம புஷ்கர விஷ்டராயா:


தத்யாத் தயாநுவபநோ த்ரவிணாம்பு தாரா
மஸ்மிந்நகிஞ்சந விஹங்கஸிஸௌ விஷண்ணே
துஷ்கர்ம கர்ம மபநீய சிராய தூரம்
நாராயண ப்ரணயிநி நயநாம்புவாஹ:


கீர்தேவதேதி கருடத்வஜ ஸுந்தரீதி
ஸாகம்பரீதி ஸஸிஸேகர வல்லபேதி
ஸ்ருஷ்டிஸ்திதி ப்ரளயகேளிஷு ஸம்ஸ்திதா யா
தஸ்யை நமஸ்த்ரிபுவநைக குரோஸ்தருண்யை


ஸ்ருத்யை நமோஸ்து ஸுபகர்மபலப்ரஸுத்யை
ரத்யை நமோஸ்து ரமணீய குணார்ணவாயை
சக்த்யை நமோஸ்து சதபத்ரநிகேதநாயை
புஷ்ட்யை நமோஸ்து புருஷோத்தம வல்லபாயை


நமோஸ்து நாளீகநிபாநநாயை
நமோஸ்து துக்தோததி ஜந்ம பூம்யை
நமோஸ்து ஸோமாம்ருத ஸோதராயை
நமோஸ்து நாராயண வல்லபாயை


நமோஸ்து ஹேமாம்புஜ பீடிகாயை
நமோஸ்து பூமண்டலநாயிகாயை
நமோஸ்து தேவாதிதயாபராயை
நமோஸ்து ஸார்ங்காயுதவல்லபாயை


நமோஸ்து தேவ்யை ப்ருகுநந்தநாயை
நமோஸ்து விஷ்ணோருரஸி ஸ்தியயை
நமோஸ்து லக்ஷ்ம்யை கமலாலயாயை
நமோஸ்து தாமோதரவல்லபாயை


நமோஸ்து காந்த்யை கமலேக்ஷணாயை
நமோஸ்து பூத்யை புவநப்ரஸூத்யை
நமோஸ்து தேவாதிபி ரர்ச்சிதாயை
நமோஸ்து நந்தாத்மஜவல்லபாயை


சம்பத்கராணி சகலேந்த்ரிய நந்தநாதி
சாம்ராஜ்யதாநவிபவாநி ஸரோருஹாக்ஷி
த்வத்வந்தநாதி துரிதாஹரணோத்யதாநி
மாமேவ மாதரநிஸம் கலயந்து மாந்யே


யத்கடாக்ஷஸமுபாஸநாவிதி:
ஸேவகஸ்ய ஸகலார்த்தஸம்பத:
ஸந்தநோதி வசநாங்க மாநஸை:
த்வாம் முராரிஹ்ருதயேஸ்வரீம் பஜே


ஸரஸிஜநிலயே ஸரோஜஹஸ்தே
தவள தமாம்ஸுக கந்தமால்யஸோபே
பகவதி ஹரிவல்லபே மநோக்ஞே
த்ரிபுவநபூதிகரி ப்ரஸீத மஹ்யம்


திக்கஸ்திபி: கனககும்பமுகாவஸ்ருஷ்ட
ஸ்வர்வாஹிநீ விமலசாரு ஜலாப்லுதாங்கீம்
ப்ராதர்நமாமி ஜகதாம் ஜநநீ மஸேஷ
லோகாதிநாத க்ருஹிணீ மம்ருதாதிபுத்ரீம்


கமலே கமலாக்ஷவல்லபே த்வம்
கருணாபுர தரங்கிதைரபாங்கை:
அவலோகய மாமகிஞ்சநாநாம்
ப்ரதமம் பாத்ரமக்ருத்ரிமம் தயாயா:


ஸ்துவந்தி யே ஸ்துதிபிரமீபிரந்வஹம்
த்ரயீமயீம் த்ரிபுவநமாதரம் ரமாம்
குணாதிகா குருதரபாக்யபாகிந:
பவந்தி தே புவி புதபாவிதாஸயா:

ஸ்ரீ தன்வந்தரி காயத்ரி மந்திரம்




ஸ்ரீ தன்வந்தரி காயத்ரி மந்திரம்

ஓம் வாசுதேவாய வித்மஹே
வைத்யராஜாய  தீமஹி
தந்நோ தன்வந்தரி ப்ரசோதயாத் 

September 26, 2012

கோளறு பதிகம்

வேயுறு தோளிபங்கன் விடமுண்டகண்டன் மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள்கங்கை முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழம் வெள்ளி சனிபாம் பிரண்டு முடனே
ஆசறுநல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே.

என்பொடு கொம்பொடாமை யிவைமார் பிலங்க எருதேறி யேழை யுடனே
பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தென் உளமே புகுந்த அதனால்
ஒன்பதொ டொன்றொடேழு பதினெட்டொ டாறும் உடனாய நாள்க ளவைதாம்
அன்பொடு நல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே.

உருவளர் பவளமேனி யொளிநீ றணிந்து உமையோடும் வெள்ளை விடைமேல்
முருகலர் கொன்றைதிங்கண் முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
திருமகள் கலையதூர்தி செயமாது பூமி திசைதெய்வ மான பலவும்
அருநெதி நல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே.

மதிநுதன் மங்கையோடு வடபா லிருந்து மறையோது மெங்கள் பரமன்
நதியொடு கொன்றைமாலை முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
கொதியுறு காலனங்கி நமனோடு தூதர் கொடுநோய்க ளான பலவும்
அதிகுணம் நல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே

நஞ்சணி கண்டன்எந்தை மடவாள்த னோடும் விடையேறு நங்கள் பரமன்
துஞ்சிருள் வன்னிகொன்றை முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுணரோடு உருமிடியும் மின்னும் மிகையான பூத மவையும்
அஞ்சிடு நல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே

வாள்வரிய தளதாடை வரிகோ வணத்தர் மடவாள் தனோடு உடனாய்
நாண்மலர் வன்னிகொன்றை நதிசூடி வந்தென் உளமே புகுந்த அதனால்
கோளரி யுழுவையோடு கொலையானை கேழல் கொடுநாக மோடு கரடி
ஆளரி நல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே

செப்பிள முலைநன்மங்கை யொருபாக மாக விடையேறு செல்வ னடைவார்
ஒப்பிள மதியுமப்பும் முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
வெப்பொடு குளிரும்வாத மிகையான பித்தும் வினையான வந்து நலியா
அப்படி நல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே


வேள்பட விழிசெய்தன்று விடைமே லிருந்து மடவாள் தனோடும் உடனாய்
வாண்மதி வன்னிகொன்றை மலர்சூடி வந்தென் உளமே புகுந்த அதனால்
ஏழ்கடல் சூழிலங்கை அரையன்ற னோடும் இடரான வந்து நலியா
ஆழ்கடல் நல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே

பலபல வேடமாகும் பரனாரி பாகன் பசுவேறும் எங்கள் பரமன்
சலமக ளோடெருக்கு முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
மலர்மிசை யோனுமாலு மறையோடு தேவர் வருகால மான பலவும்
அலைகடல் மேருநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே

கொத்தலர் குழலியோடு விசையற்கு நல்கு குணமாய வேட விகிர்தன்
மத்தமு மதியுநாக முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
புத்தரோ டமணைவாதில் அழிவிக்கும்அண்ணல் திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே

தேனமர் பொழில்கொளாலை விளைசெந்நெல் துன்னி வளர்செம்பொன் எங்கும் நிகழ
நான்முகன் ஆதியாய பிரமா புரத்து மறைஞான ஞான முனிவன்
தானுறு கோளுநாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரைசெய்
ஆனசொல் மாலையோதும் அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே