March 26, 2010

கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் 7 விடை

அதன் பெயரை உச்சரிக்கும்போதே அது அழிந்து விடும் அளவிற்கு மென்மையானது. அது என்ன? என்று கேட்டு இருந்தேன்.


விடை : மௌனம்

March 25, 2010

கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் 7

அதன் பெயரை உச்சரிக்கும்போதே அது அழிந்து விடும் அளவிற்கு மென்மையானது. அது என்ன?

March 22, 2010

HTML தெரியாதவர்களும் -உங்கள் ப்ளாக் டெம்ப்ளேட் நீங்களே வடிவமைக்க

உங்கள் ப்ளாக் டெம்ப்ளேட்  நீங்களே வடிவமைக்க விரும்பினால் இங்கே கிளிக் செய்யவும். html கோடிங்  தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இது மிகவும் எளிதானது.

March 18, 2010

கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் -6

ஒரு மனிதர் டிசம்பர்  6 ஆம் தேதி, வியாழக்கிழமை  அன்று இறந்து விடுகிறார். அதே வாரம்  டிசம்பர் 5 ஆம் தேதி, புதன் கிழமை அன்று புதைக்கப்படுகிறார். இது எவ்வாறு ?

இணையத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட படத்தினை தேடி எடுப்பது எப்படி?

 இணையத்தில்  குறிப்பிட்ட வார்த்தைகள் சார்ந்த விஷயங்களை தேட கூகிள் போன்ற தேடு பொறி வலைத்தளங்கள் மிகவும் உதவியாக இருக்கின்றன. அதே போல் ஒரு குறிப்பிட்ட படத்தை  இணையத்தில் தேட  இங்கே கிளிக் செய்யவும்.  இதில் உங்கள் கணினியில் உள்ள ஒரு படத்தையோ அல்லது வேறு ஒரு இணைய தளத்தில் உள்ள ஒரு படத்தையோ  அப்லோட் செய்தால் நொடிகளில் அந்த  படத்தினை கொண்ட அனைத்து இணையதளங்களின் பட்டியலையும் காணலாம். இந்த இடுகை பயனுள்ளதாக இருந்தால் உங்கள் கருத்துக்களையும் உங்கள் வாக்குகளையும் வழங்கவும்.

March 15, 2010

இன்போசிஸ் சுதா மூர்த்தி செய்த சாதனை என்ன?


எம் டெக்  பட்டதாரியான இவர் செய்த சாதனை தான் என்ன? எம் டெக் (கணினி அறிவியலில்) தங்கப்பதக்கம் வாங்கினாரே அதுவா? அல்லதுபொதுச்சேவையில் ஈடுபட்டு பல விருதுகள் வாங்கி  இருக்கிறாரே அதுவா? அல்லது  இன்போசிஸ் என்ற நிறுவனம் வளரக்  காரணமாக இருந்தாரே அதுவா?  
இவை எல்லாம் அவர் செய்த சாதனைகளாக இருக்கலாம் ஆனால் அனைத்திற்கும் மேலாக அவர் செய்த சாதனைகளில் என்னை கவர்ந்தது., எனக்கு பிடித்த பத்து பெண்களில் ஒருவராக அவரது பெயரை எழுத வைத்தது என்னவெனில் 'டாட்டா  மோட்டோர்ஸ்' என்று இன்று அழைக்கப்படும் 'டெல்கோ' வில் பணி புரிந்த முதல் பெண் என்பதுதான்.
இவர் 'indian institute of science   bangalore' இல் எம்.டெக் படித்துக்கொண்டிருந்தபோது 'டெல்கோ' வின்  வேலை வாய்ப்பிற்கான   விளம்பரம் ஒன்றில் "wanted bright young graduates." என்ற வரிகளை பார்த்திருக்கிறார்.
அந்த விளம்பரத்தின் கடைசி வரிகளில் "female candidates need not apply" என்ற வரிகளை பார்த்து பொங்கி எழுந்து ஒரு அஞ்சலட்டையில்  JRD TATA விற்கு "டாட்டா  என்ற  முன்னணியில் உள்ள  ஒரு நிறுவனத்தில் இது போன்ற பால்நிலை பாகுபாடு காட்டப்படுவது சரியா?" என்று விளக்கம் கேட்டு கடிதம் எழுதி விட்டு அது குறித்து மறந்தும் விட்டார். ஆனால் சில நாட்களிலேயே  'டெல்கோ' விலிருந்து வந்த ஒரு தந்தியின் வாயிலாக அவருக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அந்த  தந்தியில் அவரை நேர்முகத்தேர்விற்காக  அழைத்திருப்பதாகவும், மேலும்  போக்குவரத்து செலவிற்காக முதல் வகுப்பு பயணக்கட்டணம் வழங்கப்படும்  என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.நேர்முக தேர்வில்  பங்கேற்ற அவர்    வேலைக்காக தேர்வு  செய்யப்பட்டார்.
அவரது கடிதம் கண்ட JRD டாட்டா, அவரை நேர்காணலுக்கு அழைக்கும்படியும், அவருக்கு திறமை இருக்கும் பட்சத்தில் அவரை தேர்வு செய்யும் படியும் தேர்வு செய்யும் குழுவிற்கு அறிவுறுத்தி இருந்தார் என்று அவர் பணியில் சேர்த்தும் தெரிந்து கொண்டாராம்.

March 10, 2010

எனக்கு பிடித்த 10 பெண்கள்! (தொடர்பதிவு)

என்னையும் ஒரு பதிவராகக்  கருதி தொடர்பதிவு எழுத அழைத்த வெள்ளிநிலா  அவர்களுக்கு நன்றி..

 எனக்கு பிடித்த என்னை வியக்கச்செய்த பத்துப் பெண்கள் இதோ..

அவர்கள் ஒவ்வொருவரும் செய்த சாதனைகளை தனித்தனி பதிவுகளாக பின்னர் வெளியிடுகிறேன்.

1 . அன்னை தெரசா
 

2 .  கல்பனா சாவ்லா 

3 .  ஜான்சி ராணி லக்ஷ்மி பாய்

4 . டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி 

5 .  சுதா மூர்த்தி  (இன்போசிஸ் நாராயண மூர்த்தி அவர்களின் மனைவி )

6 .  ஹெலன் கெல்லர் 

7 .  ஒளவையார்
 

8 மேரி கியுரி


9 தில்லையாடி வள்ளியம்மை

10 கிரண் பேடி
 
 இந்த தொடர்பதிவை தொடர நான்  அழைக்கும் நண்பர்கள் - 
சேட்டைக்காரன் 
செந்தில் 
மதுரை சரவணன் 
அகல் விளக்கு 
சிநேகிதன் 
சுரேகா

நிபந்தனைகள்
உங்களின் சொந்தகாரர்களாக இருக்க கூடாது.,
வரிசை முக்கியம் இல்லை.,
ஒரே துறையில் பல பெண்மணிகள் நமக்கு பிடித்தவர்களாக இருக்கும்,
இந்த பதிவுக்கு வெவ்வேறு துறையில் பத்து நபர்கள்.

இதையும் கண்டுபிடியுங்கள் விடை

நீதிபதியின் மகன் காவல் துறை அதிகாரி...
காவல் துறை அதிகாரியின் தந்தை வழக்கறிஞர்..
எனில் நீதிபதி யார்?


விடை: நீதிபதி காவல் துறை அதிகாரியின்  தாய்.





March 7, 2010

கண்டு பிடியுங்கள் பார்க்கலாம் - 4 விடை

                             தராசுதட்டு 1           தராசுதட்டு 2       வெளியே

முதல்முறை                      19                        19                           1

தராசுதட்டுகள் இரண்டும் சமம் எனில் வெளியே உள்ள ஒரு பழம் தான் எடை மிகுந்தது.
சமம் இல்லை எனில் எந்த தட்டில் எடை அதிகமாக உள்ளதோ அதில் உள்ள பழங்களை 
இரண்டாம் முறை எடை போடவேண்டும்.

இரண்டாம்முறை           9                               9                             1     
மூன்றாம் முறை            3                                3                             3             
நான்காம் முறை            1                                 1                            1

சரியான விடை அளித்த செந்தில், மங்குனி அமைச்சர் , சுகு , "ரொம்ப சூப்பர்" அனைவருக்கும் வாழ்த்துக்கள். "ரொம்ப சூப்பர்" வித்தியாசமான முயற்சி. வாழ்த்துக்கள்.

March 6, 2010

இதையும் கண்டுபிடியுங்கள்

நீதிபதியின் மகன் காவல் துறை அதிகாரி...
காவல் துறை அதிகாரியின் தந்தை வழக்கறிஞர்..
எனில் நீதிபதி யார்?

கண்டு பிடியுங்கள் பார்க்கலாம் - 4

உங்களிடம் கொடுக்கப்பட்ட, பார்ப்பதற்கு ஒரே மாதிரி தோன்றும்  39 ஆரஞ்சு பழங்களில்  ஒன்று மட்டும் அதன் எடையில் அதிகமாக  இருக்கிறது எனில்  அந்த அதிக  எடை கொண்ட பழத்தினை எவ்வாறு கண்டுபிடிப்பீர்கள். தராசினை நான்கு முறை மட்டுமே உபயோகிக்க வேண்டும்.