October 26, 2012

நல்லதோர் வீணை செய்தே...

பாடலை கேட்க இங்கே கிளிக் செய்யவும் 


நல்லதோர் வீணை செய்தே - அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ (2)

சொல்லடி சிவசக்தி - எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்  (2)  (நல்லதோர்)

வல்லமை தாராயோ - இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே (2)


சொல்லடி சிவசக்தி - நிலச்
சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ  (2)   (நல்லதோர்)


விசையுருப் பந்தினைப் போல் - உள்ளம்
வேண்டியபடிசெல்லும்  உடல் கேட்டேன் (2)

நசையறு மனம் கேட்டேன் - நித்தம்
நவமெனச் சுடர் தரும் உயிர் கேட்டேன்  (2)  (நல்லதோர்)

தசையினைத் தீச்சுடினும் - சிவ
சக்தியைப் பாடும் நல்லகம் கேட்டேன் (2)

அசைவறு மதி கேட்டேன் - இவை
அருள்வதில் உனக்கெதும்  தடையுளதோ (2) (நல்லதோர்)
 

No comments: