December 13, 2012

கண்ணம்மா என் குலதெய்வம் - நின்னைச் சரணடைந்தேன்

 
கண்ணம்மாவை தனது குலதெய்வமாக பாவித்து 
அவளிடம் சரண் புகும் பாரதியார், 
 
பொன்னை உயர்வை புகழை விரும்பும் 
என்னை கவலைகள் அணுகா வண்ணம் 
காப்பாய் தாயே...
 
வறுமையும் அச்சமும் என் நெஞ்சில் வந்து 
குடி புகுந்துள்ளன அவற்றை கொன்று 
அழிப்பாய் தாயே ..
 
நான் என்ன செய்வது என்று குழம்பி தவிக்காமல், 
நீ சொல்லும் வண்ணம் செய்து 
மன நிம்மதி பெற அருள்வாய் தாயே.. 
 
என்று மனமுருக வேண்டி பின் 
 
அவளை சரண் புகுந்து விட்டதால் இனி 
துன்பமோ சோர்வோ தோல்வியோ எனக்கு 
இல்லை..
நல்லது எது  தீயது எது என்று எனக்கு தெரியாது,
அந்த  தாயே நல்லதை நிலை நிறுத்தி
தீமையை என்னை விட்டு ஓட்ட வேண்டும் 
என உருகும் பாடல் இது 
 
அச்சமில்லை அச்சமில்லை என்று பாடியவன் 
மனதிலே அச்சம் புகுந்ததேன்? 
என்ற கேள்வியுடன் இதோ அந்த பாடல்  
 
 
  
 
 
 நின்னைச் சரணடைந்தேன் - கண்ணம்மா!
  நின்னைச் சரணடைந்தேன்!

                  சரணங்கள் 
 
 பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும்
  என்னைக் கவலைகள் தின்னத்  தகாதென்று

 மிடிமையும் அச்சமும் மேவியென் நெஞ்சில்
 குடிமைபுகுந்தன, கொன்றவைபோக் கென்று

 தன்செய லெண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு
 நின்செயல் செய்து நிறைவு பெறும்வணம்

 துன்ப மினியில்லை, சோர்வில்லை, தோற்பில்லை,
 அன்பு நெறியில் அறங்கள் வளர்த்திட

 நல்லது தீயது நாமறியோம்! அன்னை
 நல்லது நாட்டுக! தீமையை ஓட்டுக!

2 comments:

சசிகலா said...

நான் என்ன செய்வது என்று குழம்பி தவிக்காமல்,
நீ சொல்லும் வண்ணம் செய்து
மன நிம்மதி பெற அருள்வாய் தாயே..

அற்புதமான பகிர்வு தொடருங்கள்.

இளந்தென்றல் said...

வருகைக்கு நன்றி சசிகலா