December 26, 2012

தீதும், நன்றும், பிறர் தர வாரா

யாதும் ஊரே; யாவரும் கேளிர்;
தீதும், நன்றும், பிறர் தர வாரா;
நோதலும், தணிதலும், அவற்றோ ரன்ன;
சாதலும் புதுவது அன்றே! வாழ்தல்
இனிது என மகிழ்ந்தன்றும் இலமே! முனிவின்
இன்னாது என்றலும் இலமே! மின்னொடு
வானம் தண் துளி தலைஇ ஆனாது,
கல்பொருது இரங்கும், மல்லல் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புனை போல், ஆருயிர்
முறைவழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் ஆதலின், மாட்சியில்
பெரியோரை வியத்தலும் இலமே!
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே!
யாதும் ஊரே, யாவரும் கேளிர்;
அனைத்து இடங்களும் நமது ஊரே ,
அனைவரும் நம் உறவினர்களே ;

 தீதும், நன்றும், பிறர் தர வாரா;
தீயவை , நல்லவை. பிறர் தந்து வருபவை அல்ல 

நோதலும், தணிதலும், அவற்றோர் அன்ன;
கஷ்டங்களும், அந்த கஷ்டங்களுக்கான  
தீர்வும் கூட அதே  போல தான். பிறர் தந்து வருபவை அல்ல.

சாதலும் புதுவது அன்றே! 
மரணம் புதுமையான ஒரு விஷயம் இல்லை.
வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே!
வாழ்க்கை இனிமையானது என்று மகிழவும் மாட்டோம்.
முனிவின் இன்னாது என்றலும் இலமே!
வாழ்வு துன்பமென்று கூறி ஒதுங்கவும் மாட்டோம் 
மின்னொடு வானம் தண் துளி தலைஇ ஆனாது, 
கல்பொருது இரங்கும், மல்லல் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புனை போல், ஆருயிர்
முறைவழிப் படூஉம் என்பது திறவோர் 
காட்சியில் தெளிந்தனம் ஆதலின்,   

ஆற்று நீர்  செல்லும் வழியில் ஓடும் படகு போல,
நமது வாழ்க்கை முன்னரே  தீர்மானிக்கப்பட்ட  
வழியே தான்  நடக்கும் என்று,
வாழ்வின்  திறம் அறிந்த சான்றோர் 
கூறியதைக் கேட்டு தெளிவு பெற்றோம் ஆகையால்

மாட்சியில் பெரியோரை வியத்தலும் இலமே!
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே!

மாண்புள்ள பெரியோரைக் கண்டு 
நாம் வியப்படையவும்  மாட்டோம்.
நம்மினும் தாழ்ந்த நிலையிலுள்ளவர்களை
இகழ்ந்து தூற்றவும் மாட்டோம்.


No comments: